Thursday, July 17, 2025

காட்டுப் பூ

Posted by sasi at 3:46 AM 0 comments

 








பசியில் இளைத்து 

புயலில் களைத்து 

புன்னகை பூத்திருக்கும் 

காட்டு செடி 

நான்


போவோர்

வருவோர் 

பறிப்பர்

நுகர்வர் 

கொண்டாடுவர் 

பின் எறிவர்

என் வாசனைப் பூவை 



sasiboojium.blogspot.com

விடுப்பு

Posted by sasi at 3:25 AM 0 comments

 








நீண்ட நாட்களாக

களைத்துப் போய்

கண்ணயர்ந்து கிடக்கிறது 

என் கவிதை

 

கண் விழித்தொரு நாள்

காரியமாற்றுமோ ?

கண் மூடியொரு நாள்

மண் மூடிப்போகுமோ ? 

 

காலமோ....

கவிதையோ....

யாது நிகழுமோ

யாரறிவர்  ?

 

sasiboojium.blogspot.com

 

 

sasi Template by Ipietoon Blogger Template | Gift Idea