Tuesday, March 10, 2026

ஆருடம்

Posted by sasi at 2:30 AM 0 comments

 

இன்று பகலிலோ

இன்று இரவிலோ

நாளையோ

நாளை மறுநாளோ

அதற்கு பிறகோ....

 

ஜனிக்கலாம்

ஒரு மெலிய காற்றில்

மலரொன்று 

மலர்வதைப்  போல

ஒரு கவிதை


அல்லது 

 

மரணிக்கலாம்

ஒரு வலிய காற்றில்

மரமொன்று 

வீழ்வதைப் போல

ஒரு கவிதை

 

உலகெல்லாம் 

கொட்டி கிடக்கும்

கோடானு கோடி

அற்ப கவிதைகளில்

ஒன்று 

மலர்ந்தாலென்ன ?

ஒன்று 

மறைந்தாலென்ன  ?

 

sasi Template by Ipietoon Blogger Template | Gift Idea