காலத்திற்கு ஒரு கடிதம்...
ஏ காலமேஏன் என் மீது
உன் சவுக்குகளையே
சொடுக்குகிறாய் ?
நான் வலிகொண்டு
அலறும் போதெல்லாம்
நீ ஆனந்த புன்னகை
புரிகிறாய்
நானறிந்தேன்...
வலி கொடுத்து
வலி கொடுத்து
எனக்கு
ஞான ஒளி கொடுக்கிறாய்
எது எது கேட்டேனோ
அது அதை நீ தரவே இல்லை
எது எது மறுத்தேனோ
அது அதை நிறைய நிறைய
கொடுக்கிறாய்
நானறிந்தேன்...
அழிகின்றதை எல்லாம்
நான் பட்டியலிட்டு இருந்தேன்
நீயோ
அழியாத ஒன்றை
வாரி வழங்கி விட்டாய்
இன்பங்களையே
நீ கொடுத்து இருந்தால்
நான் போதை பித்தேறி
பிரபஞ்சமே நானென்று
ஆணவ கூரையேறி
கூவி இருப்பேன்
நீ கொடுத்த
துன்பங்களின் பாடங்களால்
பிரபஞ்சத்தில்
நானொரு புள்ளியென்று
இதயத்தில்
ஒளி கொண்டு விட்டேன்
இது
துறவியென்று
திரிகின்றவனுகெல்லாம் கூட
கிட்டாத யோகம்
மனித இயந்திரமாய்
இறுகி போகாமல்
என்னையொரு
பூவாய் மலர்த்திய
காலமே...
உனக்கு நன்றிகள் கோடி
ஏ காலமே
உன் சவுக்குகளையே
சொடுக்குகிறாய் ?
நான் வலிகொண்டு
அலறும் போதெல்லாம்
நீ ஆனந்த புன்னகை
புரிகிறாய்
நானறிந்தேன்...
வலி கொடுத்து
வலி கொடுத்து
எனக்கு
ஞான ஒளி கொடுக்கிறாய்
எது எது கேட்டேனோ
அது அதை நீ தரவே இல்லை
எது எது மறுத்தேனோ
அது அதை நிறைய நிறைய
கொடுக்கிறாய்
நானறிந்தேன்...
அழிகின்றதை எல்லாம்
நான் பட்டியலிட்டு இருந்தேன்
நீயோ
அழியாத ஒன்றை
வாரி வழங்கி விட்டாய்
இன்பங்களையே
நீ கொடுத்து இருந்தால்
நான் போதை பித்தேறி
பிரபஞ்சமே நானென்று
ஆணவ கூரையேறி
கூவி இருப்பேன்
நீ கொடுத்த
துன்பங்களின் பாடங்களால்
பிரபஞ்சத்தில்
நானொரு புள்ளியென்று
இதயத்தில்
ஒளி கொண்டு விட்டேன்
இது
துறவியென்று
திரிகின்றவனுகெல்லாம் கூட
கிட்டாத யோகம்
மனித இயந்திரமாய்
இறுகி போகாமல்
என்னையொரு
பூவாய் மலர்த்திய
காலமே...
உனக்கு நன்றிகள் கோடி
1 comments:
இப்படித்தான் இருக்க வேணும் பதிவு சபாஷ், இந்த்ளியிலே இனச்சாச்சா
Post a Comment