Thursday, December 17, 2020

அன்புள்ள இயற்கையே

Posted by sasi at 4:14 AM

 



எளிய மனிதர்களோடு

ஏனிந்த மழை யுத்தம் ?

இயற்கை கெடுக்கும்

மனிதத் தவறு

மகாத் தவறு

எம்மை தண்டிக்க

நினைத்தாயோ ?

தண்ணீரில் நனைத்தாயோ ?


நீ ஊதித் தள்ளினாலே

நாமளிவோம்

எம்மை மோதித் தள்ளவா

புயல்களை ஏவினாய் ?


இரண்டாயிரத்து இருபதே....


கொரானா தொடங்கி

புரெவி வரை

எத்தனை அஸ்திரங்கள்....


கோடானு கோடி

மனிதக் கைகளால்

அறைந்து முடித்தாலும்

இயற்கை நின்று சிரிக்கும்.


இயற்கையின் ஒற்றைக் கை

ஓங்கி அறைந்தால்

மானுடம் மொத்தம்

அடையாளமின்றி மரிக்கும்.


ஏ... வலிய இயற்கையே !

நிராயுதபாணி 

எம்மை விட்டுவிடு

உன் கோபத்தை கொஞ்சம்

குறைத்து விடு

பூமியில்...

எம்மை வாழவிடு.


sasiboojium.blogspot.com


0 comments:

Post a Comment

 

sasi Template by Ipietoon Blogger Template | Gift Idea